×

வை. தொகுதியை வளர்ச்சியடைய வைப்பேன் இறுதி கட்ட பிரசாரத்தில் ஊர்வசி அமிர்தராஜ் பேச்சு

ஏரல், ஏப்.5: வைகுண்டம் சட்டமன்ற தொகுதியை வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற்றுவேன் என ஏரலில் நடந்த இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் பேசினார். வைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் தொகுதி முழுவதும் கிராமம், கிராமமாக சென்று தீவிரமாக கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வந்தார். வைகுண்டம் கிழக்கு ஒன்றிய பகுதியான ஏரல் காந்திசிலைக்கு மாலை அணிவித்து இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் ஏரல் முக்கிய வீதிகள் வழியாக சாயர்புரம் பஜார் பகுதி, பண்டாரவிளை, பெருங்குளம், வைகுண்டம் பஜார் பகுதியில் பிரச்சாரம் செய்து ஆழ்வார்திருநகரி காமராஜர் சிலை அருகில் தேர்தல் தனது பிரசாரத்தை முடித்தார். ஏரல் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:     தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன.

 மக்களை பற்றி கவலைப்படாத ஒரு அரசு இங்கு  செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளது. ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இப்பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாக இருப்பதால் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைத்திட நடவடிக்கை எடுத்திடுவேன். வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல், சாத்தான்குளம் தாலூகா மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். பேரூந்து வசதிகள் இல்லாத கிராமங்களுக்கு பேரூந்து வசதி செய்து கொடுக்கப்படும். பெண்கள் சுய தொழில் ஆரம்பிக்க கூட்டுறவு வங்கிகளில் மானியத்துடன் கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படும். வைகுண்டம் தொகுதி வளர்ச்சிடைந்த தொகுதியாக மாற்றுவேன்’ என்றார்.

 நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய திமுக செயலாளர்கள் கிழக்கு பிஜி ரவி, மேற்கு கொம்பையா, மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள், தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரராஜன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராயப்பன், பாலமுருகன், வேங்கையன், நகர செயலாளர்கள் ஏரல் பார்த்திபன், சாயர்புரம் அறவாழி, பெருங்குளம் சுடலை, வைகுண்டம் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜவேலு, வைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ டேனியல்ராஜ், நகர காங்கிரஸ் தலைவர்கள் பாக்கர் அலி, சாயர்புரம் ஜேக்கப், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன்துரை, மாவட்ட வர்த்தக அணி தலைவர் டேவிட்பிரபாகரன், முன்னாள் ஓபிசி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வை. வட்டார தலைவர்கள் கிழக்கு தாசன், மேற்கு நல்லகண்ணு,  வை. யூனியன் கவுன்சிலர் பாரத், மாவட்ட பொருளாளர் காங்கிரஸ் எடிசன், ஏரல் பிஸ்மிசுல்தான், அந்தோணிகாந்தி, காமராஜ்காந்தி, முஸ்லிம் மாவட்ட ஜமாத் உலமா தலைவர் ஹாமீத்பக்ரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் மஹ்மூதுல் ஹசன், ஊடகம் முஹைதீன், மதிமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன், மார்ச்சிஸ்ட் கம்யூ. கட்சி ஒன்றிய செயலாளர் நம்பிராஜன்  உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Augie. ,Urvasi Amirtaraj ,
× RELATED மாங்கொட்டாபுரம் பஞ்சாயத்து...